Friday, 10th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: சென்னையில் பிறந்த, பாலிவுட்டின் முன்னாள் கனவு கன்னி, பிரபல நடிகை, ஹேமமாலினியை, உத்தர பிரதேசத்தின் மதுரா தொகுதியின் வேட்பாளராக, பா.ஜ., மீண்டும் நிறுத்தி உள்ளது.
வேட்பு மனு தாக்கல் செய்ததும், தொகுதியில் உள்ள பகுதிகளுக்கு சென்றார்.அங்கு, கோதுமை அறுவடை நடந்து கொண்டிருந்தது. உடனடியாக, கத்தியை வாங்கி, அறுவடை செய்ய துவங்கிவிட்டார், ஹேமமாலினி.அந்தப் படங்கள், சமூக வலைதளங்களில் வெளியானதும், மக்களின் கிண்டலும் துவங்கி விட்டது.
'விலை உயர்ந்த புடவை அணியும் ஒரே விவசாயி; தேர்தலுக்கான நாடகம்; இது எந்த சினிமாவுக்கான படப்பிடிப்பு' என, மக்கள் கிண்டல் செய்ய துவங்கி விட்டனர்.தேர்தலில் வெற்றியை அறுவடை செய்வதற்காக, இந்த அரசியல் நாடகம் நடத்துகிறார் என்றும் விமர்சிக்கப்பட்டார்.